Tuesday, October 21, 2014

அழகிய கவிதை

அவளைபோல் அழகாக சிரிக்க
நிலாவும் முயல்கிறது
பின் தோற்று மறைகிறது

எதிர்பாரா நேரத்தில் நான்
பரிசளித்த ரோஜாவை பார்த்து
உன் கன்னங்கள்
வெட்கத்தால் சிவக்கிறது
அதை கண்ட ரோஜா இதழ்கள்
இன்னும் சிவக்கிறது


கடவுள் யோசித்து எழுதினாரோ
இல்லை மிகவும் நேசித்து எழுதினாரோ
அவள் என்னும் அழகிய கவிதையை

காதலில் பல கவிதைகள் உண்டு
கவிதைகள் மேல் எனக்கு
கொஞ்சம் காதல் உண்டு
என்மேல் காதல் கொண்ட ஒரு
அழகிய கவிதையும் இங்குண்டு