Saturday, October 4, 2014

அவளை ரசித்த பிறது

நட்சத்திரங்கள்
அது அழகற்று போனது
உன் புன்னகையை லயித்த பிறகு ...

மின்மினி பூச்சிகள்
அவை மினுமினுப்பை இழந்தது
உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறது...

மழலை பேச்சு
இனி பிழை என தோன்றியது
உன் கொஞ்சலை கேட்ட பிறகு...

முக்கனிகள்
அவை சுவையற்று போனது
உன் இதழ்களை ருசித்த பிறகு...

சொர்க்கம்
அது நிஜமென்று தெரிந்தது
நீ கட்டியணைத்து முத்தமிட்ட பிறகு...

Labels: