Tuesday, October 21, 2014

அழகிய கவிதை

அவளைபோல் அழகாக சிரிக்க
நிலாவும் முயல்கிறது
பின் தோற்று மறைகிறது

எதிர்பாரா நேரத்தில் நான்
பரிசளித்த ரோஜாவை பார்த்து
உன் கன்னங்கள்
வெட்கத்தால் சிவக்கிறது
அதை கண்ட ரோஜா இதழ்கள்
இன்னும் சிவக்கிறது


கடவுள் யோசித்து எழுதினாரோ
இல்லை மிகவும் நேசித்து எழுதினாரோ
அவள் என்னும் அழகிய கவிதையை

காதலில் பல கவிதைகள் உண்டு
கவிதைகள் மேல் எனக்கு
கொஞ்சம் காதல் உண்டு
என்மேல் காதல் கொண்ட ஒரு
அழகிய கவிதையும் இங்குண்டு


Tuesday, October 7, 2014

அழகு, அழகு

உற்சாக நேரத்தில்
உன் செல்ல கடிகள் அழகு

முத்தத்தில் ஈரமான
உன் இதழ்களின் வரிகள் அழகு

நம் முத்த சத்தங்களில்
உன் வெட்க சிணுங்கள் அழகு

குமரியாய் பேச தொடங்கி - பின்
மழலையாய் மாறும் கொஞ்சல் பேச்சு அழகு


இச் என்று நான் முத்தத்தை திருடும்போது
சட்டென்ற உன் திகைப்பு அழகு

நீ செல்லமாக எனக்கு வைத்த
'முத்தபிசாசு' பெயரும் அழகு

என் கன்னங்களை அலங்கரிக்கும்
உன் வண்ண இதழ் கோலங்கள் அழகு

காற்றுக்கு வழிவிடாமல் மூச்சுதிணற
நீ முத்தமிட்ட தருணங்கள் அழகு


Labels:

Saturday, October 4, 2014

தமிழ் மொழி, காதல் விழி

அவள் விழி பேசிய மொழியில்
என்னுள் உயிர் பூ ஒன்று பூத்தது

அவளின் அழகியலை வர்ணிக்க
வார்த்தை தேடலில் தமிழின்பால்
சிறு காதல் மலர்ந்தது

தமிழின் நெளிவு சுழிவுகள்
என் ஆவலை தூண்டுகின்றன
அவளின் நளின வளைவுகள்
மோகக் காதலை தூண்டுகின்றன

அவள் இதழ்களில் தவழ்வதினால்
தமிழ் இவ்வளவு அழகாயிற்றோ ?
இல்லை அவள் இதழ்களில் தவழவே
தன்னை தானே அழகாக்கிற்றோ ?

தமிழ் மொழி அழகு என்றால்
அவளின் காதல் விழி பேரழகு.

Labels:

அவளை ரசித்த பிறது

நட்சத்திரங்கள்
அது அழகற்று போனது
உன் புன்னகையை லயித்த பிறகு ...

மின்மினி பூச்சிகள்
அவை மினுமினுப்பை இழந்தது
உன் கண் சிமிட்டலில் ரசித்த பிறது...

மழலை பேச்சு
இனி பிழை என தோன்றியது
உன் கொஞ்சலை கேட்ட பிறகு...

முக்கனிகள்
அவை சுவையற்று போனது
உன் இதழ்களை ருசித்த பிறகு...

சொர்க்கம்
அது நிஜமென்று தெரிந்தது
நீ கட்டியணைத்து முத்தமிட்ட பிறகு...

Labels:

அவள் இல்லாத உலகம்

தானே அழுது, தானே அடங்கி

தானே பசியாறி, தானே நடை பழகி

அவதானிக்க ஆளில்லாமல்
அன்புக்கு ஏங்கி வளரும்

தாயில்லா குழந்தை போல்

அவள் இல்லாத உலகிற்கு - நான்
இனிதான் பழகவேண்டும்

Labels:

அவளிடம் நான் ரசிப்பவை

இதழ் பிரியாத அவளின் புன்னகை..

இதழ் விரித்து சிரிக்கையில்
இடது ஓரத்தின் வளைவு...

பழிப்பு காட்டும் உதட்டோர
குட்டி நாக்கு...

குழந்தையை மிஞ்சும்
கொஞ்சல் பேச்சு...

முத்தம் கேட்டால்
முறைக்கும் பொய்கோபம்...

என் இதயம் கரைக்கும்
ஒரு முத்தம்
ஒரு துளி கண்ணீர்..

அருகில் நடக்கும்போது
உரசி கைகோர்கும் உரிமை...

Labels:

மொழியோ, விழியோ

மொழியோ,  விழியோ,  செவ்விதழோ,
எதில் நீ காதல் மொழித்தாலும்,
என்னுள் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் கிறக்கம்,
உன்னை கொஞ்ச கொஞ்ச அது இன்னும் கொஞ்சம் இனிக்கும்..


எனக்கு ஒரு கனவு இருந்தது,
என்னவள் எப்படி இருக்க வேண்டும் என்று..
ஒரு நாள் அந்த கனவை காணவில்லை,
ஒரு கள்ளி, என் கனவை கழவாடி, அதற்குள் உயிரோடி
என்முன்னே நிற்கிறாள் வஞ்சிக்கொடி.




Labels:

தேன் இதழ்

பொய் கோபத்துடன் முத்தமிடும் போதெல்லாம்
நித்தமும் சொல்வாள்..

"போடா... உனக்கு எவ்வளவு குடுத்தாலும் பத்தாது..."

நான் என்னடி செய்ய உன் தேன்இதழ்கள்
எனக்கு கசப்பதே இல்லையே... !!

Labels:

இதழ் ஆராய்ச்சி

சமீபத்தில் படித்தேன்
உதடுகளுக்கு வேர்க்காதாம், அனால்
உன் உதடுகளில் மட்டும் தேன் சுரக்கிறதே, அது எப்படி ??!!
நான் நிறைய ஆராய வேண்டியிருக்கிறது...


Labels:

காதல் தீவிரவாதம்

என் விரல்களின் எல்லை மீறிய பயங்கரவாதத்தை
என்னதான் நீ தடுக்க முயன்றாலும்
ஜெயிப்பது என்னவோ
என் காதல் தீவிரவாதம் தான்...

***

யுத்தம் என்றாலே இழப்புகள் இருபக்கமும்தான்
அது நம் இதழ்களின் யுத்தத்திலும் உண்டு
உன்னில் நான் என்னை இழக்கிறேன்
என்னில் நீ உன்னை இழக்கிறாய்

Labels: