Sunday, November 23, 2014
Sunday, November 16, 2014
நீ போதும்
காற்றினில் பிறந்த கவிதையே
உன் வாசனைகள் மட்டும் போதும்
நான் சுவாசித்து பிழைத்துகொள்வேன்
நான் பார்க்காத நேரத்தில் என்னை ரசிக்கும்
உன் கள்ள விழி பார்வைகள் போதும் - நானும்
கொஞ்சம் அழகனாய் மாறிக்கொள்வேன்
உன் இதழ் பழரசத்தை கொஞ்சம்
இறுக்கி அனைத்து கொடு போதும் - நான்
காதல் தாகம் தனித்துக்கொள்வேன்
உன் நெஞ்சுக்கு நடுவே சங்கிலியில்
என்னை தொங்க விடு போதும்
உந்தன் பருவ செழிப்புகளோடு - நான்
பக்குவமாய் பழகிக் கொள்வேன்
உன் கொடிஇடையின் தரிசனம்
அவ்வப்போது கிடைத்தால் போதும்
வளைவுகளின் இயற்பியலை - நான்
வாஞ்சையாய் கற்றுக்கொள்வேன்
உன் வாசனைகள் மட்டும் போதும்
நான் சுவாசித்து பிழைத்துகொள்வேன்
நான் பார்க்காத நேரத்தில் என்னை ரசிக்கும்
உன் கள்ள விழி பார்வைகள் போதும் - நானும்
கொஞ்சம் அழகனாய் மாறிக்கொள்வேன்
உன் இதழ் பழரசத்தை கொஞ்சம்
இறுக்கி அனைத்து கொடு போதும் - நான்
காதல் தாகம் தனித்துக்கொள்வேன்
உன் நெஞ்சுக்கு நடுவே சங்கிலியில்
என்னை தொங்க விடு போதும்
உந்தன் பருவ செழிப்புகளோடு - நான்
பக்குவமாய் பழகிக் கொள்வேன்
உன் கொடிஇடையின் தரிசனம்
அவ்வப்போது கிடைத்தால் போதும்
வளைவுகளின் இயற்பியலை - நான்
வாஞ்சையாய் கற்றுக்கொள்வேன்