Sunday, November 23, 2014

ஏக்கங்கள்

அவள் அன்று காட்டிய சின்ன சின்ன அன்புகள்
இன்று பெரிய பெரிய ஏக்கங்களாய் - என்
இதயத்தில் கிடந்தது அழுத்துகிறது...

அந்த ஏக்கங்களை எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீரில்
கரைத்துக் கொண்டிருக்கிறேன்...


Sunday, November 16, 2014

நீ போதும்

காற்றினில் பிறந்த கவிதையே
உன் வாசனைகள் மட்டும் போதும்
நான் சுவாசித்து பிழைத்துகொள்வேன்


நான் பார்க்காத நேரத்தில் என்னை ரசிக்கும்
உன் கள்ள விழி பார்வைகள் போதும் - நானும்
கொஞ்சம் அழகனாய் மாறிக்கொள்வேன்


உன் இதழ் பழரசத்தை கொஞ்சம்
இறுக்கி அனைத்து கொடு போதும் - நான்
காதல் தாகம் தனித்துக்கொள்வேன்


உன் நெஞ்சுக்கு நடுவே சங்கிலியில்
என்னை தொங்க விடு போதும்
உந்தன் பருவ செழிப்புகளோடு - நான்
பக்குவமாய் பழகிக் கொள்வேன்


உன் கொடிஇடையின் தரிசனம்
அவ்வப்போது கிடைத்தால் போதும்
வளைவுகளின் இயற்பியலை - நான்
வாஞ்சையாய்  கற்றுக்கொள்வேன்